27th May 2024 14:30:46 Hours
தெற்கு சூடானில் உள்ள ஐக்கிய நாடுகளின் அமைதிகாக்கும் படையின் நிலை 2 மருத்துவமனைக்கான முன் பயிற்சி பாடநெறியானது 22 மே 2024 அன்று இலங்கை அமைதிகாக்கும் பணிக்கான நடவடிக்கை பயிற்சி நிறுவனத்தில் வெற்றிகரமாக நிறைவுசெய்யப்பட்டது.
16 அதிகாரிகள் மற்றும் 81 சிப்பாய்களின் பங்கேற்புடன் 2024 ஏப்ரல் 29 அன்று பாடநெறி ஆரம்பிக்கப்பட்டது. ஐக்கிய நாடுகள் சபையின் நடைமுறை மற்றும் தத்துவார்த்த அம்சங்கள் மற்றும் கட்டளைகளின் படி அவர்களுக்கு ஒதுக்கப்படும் சிறப்புப் பணிகள் குறித்த அடிப்படை அறிவை இந்தப் பாடநெறி வழங்கியது. பாடத்திட்டமானது ஐ.நா. அமைதி காத்தல், சூழ்நிலை பயிற்சிகள், சர்வதேச மனிதாபிமான சட்டம் மற்றும் மனித உரிமைகள், களப் பயிற்சி மற்றும் பல முக்கிய அம்சங்களைக் கொண்டிருந்தது.
சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் இலங்கை அமைதிகாக்கும் பணிக்கான நடவடிக்கை பயிற்சி நிறுவனத்தின் தளபதி பிரிகேடியர் எஸ்எ ஹெட்டிகே ஆர்எஸ்பீ பீஎஸ்சீ அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு, பங்குபற்றியவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கியதன் பின்னர் நிறைவுரையை நிகழ்த்தினார். இந்த நிகழ்வின் போது இலங்கை அமைதிகாக்கும் பணிக்கான நடவடிக்கை பயிற்சி நிறுவனத்தின் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் பயிற்றுனர்களும் கலந்து கொண்டனர்.