06th April 2024 15:46:01 Hours
இராணுவப் போர்க் கல்லூரியில் 2024 ஏப்ரல் 05 ஆம் திகதி தலைமைத்துவ சவால்கள் (கட்டளையிடுதலின் அனுபவம்) பற்றிய விரிவுரை நடைபெற்றது. யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எம்.ஜி.டபிள்யூ.டபிள்யூ.டபிள்யூ.எம்.சி.பி விக்ரமசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் பிரதம பேச்சாளராகக் கலந்து கொண்டு விரிவுரையை நடாத்தினார்.
சிரேஷ்ட அதிகாரியை இராணுவப் போர்க் கல்லூரியின் தளபதி மேஜர் ஜெனரல் யூ.கே.டி.டி.பீ உடுகம ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டியூ பீஎஸ்சி அவர்கள் மரியாதையுடன் வரவேற்றார். இந்த விரிவுரையில் யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி தனது 35 வருட இராணுவ சேவையிலிருந்து பெறப்பட்ட மதிப்புமிக்க நுண்ணறிவுகளைப் பகிர்ந்து கொண்டதுடன், பங்கேற்பாளர்களுக்கு கட்டளை அனுபவத்தினையும் வழங்கினார்.
பங்கேற்பாளர்கள் தங்கள் சந்தேகங்களை பேச்சாளருடன் கலந்துரையாடியதுடன், கேள்வி பதில் மூலம் மாணவ அதிகாரிகள் அவர்களின் சந்தேகங்களைத் தெளிவுபடுத்த இச்செயலமர்வு உதவியது. இராணுவப் போர்க் கல்லூரிக்கு அவர் வழங்கிய சேவையைப் பாராட்டி, தளபதி அவர்கள் பிரதம பேச்சாளருக்கு நினைவுப் பரிசு வழங்கினார்.
பிரதித் தளபதி, கல்விசார் அதிகாரிகள், சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் அதிகாரிகள் இச்செயலமர்வில் பங்கேற்றனர்.