31st August 2023 20:15:13 Hours
செவ்வாய்க்கிழமை (ஓகஸ்ட் 29) கொழும்பில் உள்ள இலங்கை ரக்பி மற்றும் காற்பந்து மைதானத்தில் ஆஸ்திரேலியாவின் மெல்பேர்ன் ரெபெல்ஸ் மற்றும் ரக்பி விக்டோரியா கழகம் இணைந்து நடாத்திய ரக்பி 7 போட்டியில் இலங்கை இராணுவ மகளிர் ரக்பி அணி சம்பியனாகியது.
இலங்கை இராணுவம், இலங்கை கடற்படை, இலங்கை விமானப்படை உட்பட இலங்கையின் நான்கு முன்னணி ரக்பி அணிகள் இப்போட்டியில் போட்டியிட்டன.
பயிற்சிக்கான புலமைப்பரிசில் வழங்குவதற்காக இலங்கையிலிருந்து சிறந்த இரண்டு வீராங்கனைகளைத் தெரிவு செய்து அவர்கள் இருவரும் ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் ரெபெல்ஸ் கழகத்திற்காக ஆறு மாத காலத்திற்கு விளையாடுவதற்கு வசதி செய்வது போட்டியின் நோக்கமாகும்.
இலங்கை இராணுவ ரக்பி அணித் தலைவர் லான்ஸ் கோப்ரல் டிசிடி லியனகே, போட்டியின் முன்னணி ட்ரை கோல் அடித்தவரான இவர், ஆறு மாத காலத்திற்கு அவுஸ்திரேலியாவில் பயிற்சி பெறுவதற்கு புலமைப்பரிசில் பெறத் தகுதி பெற்றார்.
விளையாட்டு பணிப்பாளர் பிரிகேடியர் பீஏஎம் பிரிஸ் ஆர்எஸ்பீ யுஎஸ்பீ பீஎஸ்சி மற்றும் இராணுவ ரக்பி சம்மேளனத்தின் உறுப்பினர்கள் விளையாட்டைக் கண்டுகளிக்க அங்கு வருகை தந்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.