02nd May 2025 15:30:31 Hours
இலங்கையின் இயற்கை சூழலைப் பாதுகாப்பதற்காக இலங்கை இராணுவம் திரியாய கடற்கரையில் பெரியளவிலான மர நடுகை திட்டத்தைத் முன்னெடுப்பதன் மூலம் தேசிய "தூய இலங்கை" திட்டத்திற்கு தனது ஆதரவை வழங்கியுள்ளது. இராணுவத் தளபதியின் வழிகாட்டுதலின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டு, ஏயர் மொபைல் பிரிகேட் தலைமையில் நடைபெறும் இந்த சுற்றுச்சூழல் திட்டம், கடலோர சுற்றுச்சூழல் அமைப்புகளைப் பாதுகாப்பதற்கான நீண்டகால நடவடிக்கையாக 2,000 சவுக்கு மரங்களை நடுவதை நோக்கமாகக் கொண்டிருந்தது.
31 வது பிரிகேட் தினத்தை முன்னிட்டு ஏயர் மொபைல் பிரிகேட் தளபதியின் கருத்திற்கமைய மேற்கொள்ளப்பட்ட இந்த முயற்சி, சமூக மற்றும் சுற்றுச்சூழல் பொறுப்புணர்வுக்கான இராணுவத்தின் அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது.
இந்த திட்டத்தின் முதல் கட்டம் 2025 மே 04 ஆம் திகதி ஏயர் மொபைல் பிரிகேட் தளபதி, குச்சவெளி பிரதேச சபையின் உதவிச் செயலாளர் மற்றும் வனப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் உட்பட பல முக்கிய பங்குதாரர்களின் பங்கேற்புடன் வெற்றிகரமாக நடைபெற்றது. 1 வது விஜயபாகு காலாட் படையணியின் சுமார் 200 பணியாளர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்று, சுற்றுச்சூழல் பாதுகாப்பில் இராணுவத்தின் நேரடி ஈடுபாட்டை நிரூபித்தனர்.
இந்த ஆரம்ப கட்டத்தில், மண்ணரிப்பு மற்றும் சுற்றுச்சூழல் சீரழிவுக்கு மிகவும் எளிதில் பாதிக்கப்படக்கூடிய பகுதியாக அடையாளம் காணப்பட்ட திரியாய கடலோரப் பகுதியில் 500 சவுக்கு மரக்கன்றுகள் நடப்பட்டன. மணல் மண்ணை உறுதிப்படுத்தும் திறனுக்கும் காற்றுத் தடைகளாகச் செயல்படும் திறனுக்கும் பெயர் பெற்ற சவுக்கு மரங்கள், கடற்கரையைப் பாதுகாப்பதிலும், அப்பகுதியின் பல்லுயிர் பெருக்கத்தை மேம்படுத்துவதிலும் முக்கிய பங்கு வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.