11th April 2024 14:43:08 Hours
குருநாகல் ஹெரலியவல இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி தலைமையகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட அதிகாரிகளின் தங்குமிட வசதி வளாகத்தின் திறப்பு விழா 2024 ஏப்ரல் 10 அன்று நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே அவர்களுடன் இராணுவத் தளபதியும் இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி படைத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டப்ளியுபீ ஆர்எஸ்பீ என்டியு கலந்துக் கொண்டார்.
தலைமையகத்திற்கு வருகை தந்த தளபதியினை படையணியின் நிலையத் தளபதி பிரிகேடியர் எச் ஏ கீர்த்திநாத ஆர்எஸ்பீ கேஎஸ்பீ பீஎஸ்சீ அவர்கள் வரவேற்றார். லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் பதாகையை திரைநீக்கம் செய்து, 'கிரீன் வியூ ரிசர்வ்' என பெயரிடப்பட்டுள்ள புதிதாக நிர்மாணிக்கப்பட்ட அதிகாரிகளின் விடுதிக் கட்டிடத்தினை திறந்து வைத்து சகல அதி நவீன வசதிகளுடனான 15 அறைகளைக் கொண்ட கட்டடத்தை பார்வையிட்டார்.ஆய்வின் போது, லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் புதிய வசதியின் அம்சங்களைப் பற்றி அறிந்துக் கொண்டதுடன் இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி படையினரின் அர்ப்பணிப்பையும் கடின உழைப்பையும் பாராட்டினார், ஒதுக்கப்பட்ட நிதியில் திட்டத்தை திறம்பட முடித்தமையையும் பாராட்டினார்.
அதிகாரிகள் விடுதி வசதியை திறந்து வைத்தலுடன் 'மவுண்டன் வியூ' கட்டிடத்தின் 2ம் மாடியின் நிர்மாணப் பணிகளையும் இராணுவத் தளபதி பார்வையிட்டார்.