14th March 2024 22:31:36 Hours
இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்சீ என்டிசீ, இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே அவர்களுடன் இணைந்து 2024 மார்ச் 14 ம் திகதி ராகம 'ரணவிரு செவன' நலவிடுதியில் சிகிச்சை பெற்று வரும் போர் வீரர்களின் நலம் விசாரிக்கும் நிமித்தம் விஜயம் மேற்கொண்டார்.
இராணுவ சம்பிரதாயத்திற்கு இணங்க, படையினரால் வருகை தந்த பிரதம அதிதிக்கு பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து போர் வீரர்களின் ஒருவர் இராணுவத் தளபதியை வரவேற்றார்.
இந்த விஜயத்தை ஆரம்பித்து வைத்த இராணுவத் தளபதி, இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவியுடன் இணைந்து வைத்தியசாலை விடுதிக்கு விஜயம் செய்தார். இதன்போது சிகிச்சை பெற்று வரும் போர் வீரர்களின் நலம் விசாரித்து, சிறப்பு பரிசுப் பொதிகளை வழங்கினர்.
பின்னர், முக்கிய நிகழ்வுக்காக வருகை தந்த அனைவரும் கேட்போர் கூடத்திற்கு சென்றனர். நிகழ்வில் வரவேற்பு உரை நிகழ்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற தேநீர் விருந்துபசாரத்தில் இராணுவத் தளபதி போர் வீரர்களுடன் கலந்துரையாடினார்.
பின்னர், இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி ‘ரணவிரு செவன’ நலவிடுதிக்கு தேவையான அத்தியாவசிய உபகரணங்களை வழங்கினார்.
நிகழ்ச்சியின் இறுதியில் ராகம ரணவிரு செவன நலவிடுதியின் தளபதி பிரிகேடியர் டபிள்யூடிஎம் குமாரசிங்க ஆர்எஸ்பீ அவர்களால் இராணுவத் தளபதிக்கு விசேட நினைவுச் சின்னம் வழங்கப்பட்டது.
வளாகத்தை விட்டு வெளியேறும் முன், இராணுவத் தளபதி அதிதிகள் பதிவேட்டில் பாராட்டுக் குறிப்பை பதிவிட்டார்.
இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் டபிள்யூ எச் கே எஸ் பீரிஸ் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டீயூ, பிரதி இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் எஸ்பீஏஐஎம்பி சமரகோன் எச்டிஎம்சீஎல்எஸ்சீ மற்றும் இன்னும் சில சிரேஷ்ட அதிகாரிகள் தளபதியின் விஜயத்தில் கலந்துகொண்டனர்.