17th April 2025 16:10:42 Hours
திருகோணமலை வழங்கல் பாடசாலையில் 2025 ஜனவரி 06 முதல் 2025 ஏப்ரல் 02 வரை நடாத்தப்பட்ட உபகரண கட்டுப்பாட்டாளர் பாடநெறி எண். 7 வெற்றிகரமாக 99 அதிகாரிகளின் பங்கேற்புடன் நிறைவடைந்தது.
இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் 2025 ஏப்ரல் 17 அன்று இராணுவத் தலைமையகத்தில் பாடநெறியின் பங்கேற்பாளர்களுக்கு உரையாற்றினார்.
தனது உரையின் போது, வழங்கல் செயல்திறன் மற்றும் செயல்பாட்டு தயார்நிலையை உறுதி செய்வதில் உபகரண கட்டுப்பாட்டாளர்களின் முக்கிய பங்கை இராணுவத் தளபதி எடுத்துரைத்தார். பாடநெறியை நிறைவு செய்த அதிகாரிகளைப் பாராட்டிய அவர், மேம்படுத்தப்பட்ட விநியோகச் தொடர் முகாமைத்துவம், வள உகப்பாக்கம் மற்றும் நிர்வாகப் பொறுப்புகளுக்கு அவர்கள் புதிதாகப் பெற்ற அறிவைப் பயன்படுத்துமாறு அவர்களை வலியுறுத்தினார். மேலும் அந்தந்தப் பாத்திரங்களில் ஒழுக்கம், நேர்மை மற்றும் தொழில்முறை சிறப்பை நிலைநிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இலங்கை இராணுவத் தொண்டர் படையின் தளபதி, முதன்மைப் பணிநிலை அதிகாரிகள், சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.