07th June 2024 13:17:07 Hours
2024 ஆம் ஆண்டிற்கான இலங்கை இராணுவ மகளிர் படையணி படையலகுகளுக்கிடையிலான வலைப்பந்து சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டிகள் 30 மே 2024 அன்று பொரளை இலங்கை இராணுவ மகளிர் படையணி தலைமையகத்தில் நடைபெற்றது. இலங்கை இராணுவ மகளிர் படையணியின் படைத் தளபதியும் 56 வது காலாட் படைப்பிரிவின் தளபதியுமான மேஜர் ஜெனரல் எஸ் கஸ்தூரிமுதலி ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ மற்றும் இலங்கை இராணுவ மகளிர் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி உதுலா கஸ்தூரிமுதலி ஆகியோர் இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டனர்.
1 வது இலங்கை இராணுவ மகளிர் படையணி, 7 வது இலங்கை இராணுவ மகளிர் படையணி, 2 வது (தொ) இலங்கை இராணுவ மகளிர் படையணி மற்றும் 3 வது (தொ) இலங்கை இராணுவ மகளிர் படையணி ஆகிய நான்கு அணிகள் சாம்பியன்ஷிப்பிற்காக போட்டியிட்டன. இறுதிப் போட்டியில் 1 வது இலங்கை இராணுவ மகளிர் படையணி ஆரவாரம் மற்றும் கைதட்டலுக்கு மத்தியில் சாம்பியன்ஷிப்பை வென்றது.
பிரதம அதிதியால் சம்பியன்ஷிப் வெற்றிக்கிண்ணம் மற்றும் தகுதிக்கான விருதுகள் வழங்கப்பட்டன. இறுதிப் போட்டிகளைக் காண, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் இலங்கை இராணுவ மகளிர் படையணியின் சிப்பாய்களும் கூடியிருந்தனர்.