Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

28th April 2023 19:20:22 Hours

இராணுவ பொறியியல் படைப்பிரிவினால் தர்மபால பாடசாலை மாணவர்களுக்கு தலைமைத்துவப் பயிற்சி

பன்னிப்பிட்டிய தர்மபால வித்தியாலயத்தின் 130 சிரேஷ்ட மற்றும் கனிஷ்ட மாணவர்களுக்கு விசேடமாக வடிவமைக்கப்பட்ட முழு நாள் தலைமைத்துவ பயிற்சி நிகழ்ச்சியை அதிபரின் வேண்டுகோளுக்கு இணங்க மத்தேகொட இலங்கை இராணுவ பொறியியல் படைப்பிரிவு தலைமையகத்தில் வெள்ளிக்கிழமை (21) நடாத்தப்பட்டது.

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களின் ஆசியுடன், இலங்கை இராணுவப் பொறியியல் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ஏஎச்எல்ஜி அமரபால ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சி அவர்கள் மாணவர்களின் தலைமைத்துவத்தை வளர்க்கும் திட்டத்திற்கான வழிகாட்டுதல்களை வழங்கினார். பண்புகள், குழுப்பணி மற்றும் குழுவை உருவாக்கும் திறன், ஆளுமை மற்றும் சமூக நெறிமுறைகள் என்பன இதன் போது மாணவர்களுக்கு கற்பிக்கப்பட்டன.

தலைமைத்துவ திட்டத்தில் விரிவுரைகள், உட்புற மற்றும் வெளிப்புற செயற்பாடுகள் மற்றும் மாதிரி செயற்பாடுகள் ஆகியவை உள்ளடங்கி இருந்தன, இது யதார்த்தமான பின்னணியில் பயிற்சி காணப்பட்டமையினால் அவர்களுக்கு மேலதிக அனுபவங்களை சேர்த்தது. இதனால் இளம் தலைமைத்துவ கலையை கற்றுக்கொள்வார்கள். அமர்வுகளின் போது "தலைமைத்துவம், ஊக்கப்படுத்தல் மற்றும் நேர முகாமைத்துவம்" பற்றிய விரிவுரைகள் நடத்தப்பட்டன.

நிகழ்ச்சியின் முடிவில் மாணவ தலைவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றதுடன், இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக இலங்கை இராணுவப் பொறியியல் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் லங்கா அமரபால அவர்களுடன் தர்மபால வித்தியாலயத்தின் அதிபர் திருமதி. மஹேஷிகா ரூபசிங்க அவர்களும் கலந்து கொண்டார்.

தரமபால வித்தியாலயத்தில் நடைபெற்ற சான்றிதழ் வழங்கும் விழாவில் ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் பழைய மாணவர் சங்க உறுப்பினர்களுடன், பிரதி நிலையத் தளபதி, சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.