Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

01st October 2024 17:14:00 Hours

இராணுவ புலனாய்வுப் படையணி சேவை வனிதையர் பிரிவின் புதிய தலைவி கடமை பொறுப்பேற்பு

இராணுவ புலனாய்வு படையணி சேவை வனிதையர் பிரிவின் வெளிசெல்லும் தலைவி திருமதி பிரசாதினி ரணசிங்க அவர்கள் 2024 செப்டெம்பர் 29 ம் திகதி உத்தியோகபூர்வ நிகழ்வின் போது, பதவியேற்கும் தலைவி திருமதி ஹன்சிகா மஹாலேகம் அவர்களிடம் தனது கடமைகளை பீரங்கி படையணி தலைமையக உணவகத்தில் உத்தியோகபூர்வமாக கையளித்தார்.

இந் நிகழ்ச்சியில் இராணுவ புலனாய்வு படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.