Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

04th June 2025 11:24:42 Hours

இராணுவ பதவி நிலை பிரதானியின் தலைமையில் இராணுவ போர்க் கல்லூரியின் இரண்டாவது நிர்வாகக் குழுக் கூட்டம்

புத்தள இராணுவ போர்க் கல்லூரியின் இரண்டாவது நிர்வாகக் குழு கூட்டம் இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் எம்.ஜீ.டபிள்யூ.டபிள்யூ.டபிள்யூ.எம்.சீ.பி விக்ரமசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்களின் தலைமையில் நடைபெற்றது. அவரது புதிய நியமனத்தின் பின்னர் இராணுவ போர்க் கல்லூரிக்கான முதல் உத்தியோகப்பூர்வ விஜயம் இதுவாகும்.

வருகை தந்த சிரேஷ்ட அதிகாரியின் வாகன தொடரணிக்கு நுழைவாயிலில் மரியாதை வழங்கப்பட்டதுடன், இராணுவ போர்க் கல்லூரியின் தளபதி மேஜர் ஜெனரல் டி.சீ.எம்.ஜீ.எஸ்.டீ கூரே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்களுடன் பிரதித் தளபதி மற்றும் தலைமை பயிற்றுவிப்பாளர் இணைந்து சிரேஷ்ட அதிகாரியை மரியாதையுடன் வரவேற்றனர்.

பொதுப்பணி பணிப்பாளர் நாயகம், பொறியியல் சேவை பணிப்பாளர் மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் ஆகியோரின் பங்கேற்புடன் நிர்வாகக் குழுக் கூட்டம் நடைபெற்றது.

இந்த விஜயத்தின் போது, இராணுவ போர்க் கல்லூரியின் பணியாளர்களுடன் கலந்துரையாடல் நடைபெற்றது. பயிற்சி, நிர்வாகம் மற்றும் வழங்கல் குறித்த கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டதுடன், கல்லூரி செயல்பாடுகளை மேம்படுத்த தேவையான வழிகாட்டுதலையும் வழங்கினார். இராணுவ பதவி நிலை பிரதானி தற்போது மேற்கெள்ளப்பட்டு வரும் அபிவிருத்தி திட்டங்களை ஆய்வு செய்ததுடன், அதன் மேம்பாட்டிற்கான அறிவுறுத்தல்களையும் வழங்கினார்.

மேலும், இராணுவ பதவி நிலை பிரதானி சிரேஷ்ட கட்டளை பாடநெறி 14, கனிஷ்ட கட்டளை பாடநெறி 33 மற்றும் கனிஷ்ட பணிநிலை பாடநெறி 29 ஆகியவற்றின் மாணவ அதிகாரிகளுடன் கலந்துரையாடினார். அவர் அங்கு உள்ளவர்களுக்கு உரையாற்றிய போது, மதிப்புமிக்க நுண்ணறிவுகளையும் ஊக்கமளிக்கும் வார்த்தைகளையும் பகிர்ந்து கொண்டார்.

இந்த நிகழ்வின் அடையாளமாக, இராணுவ போர்க் கல்லூரியின் தளபதி, இராணுவ பதவி நிலை பிரதானிக்கு ஒரு நினைவுப் பரிசை வழங்கினார்.