Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

06th November 2024 23:11:06 Hours

இராணுவ சேவை வனிதையர் பிரிவினரால் உலர் உணவு பொதிகள் விநியோகம்

இராணுவ சேவை வனிதையர் பிரிவினரால் உலர் உணவுப் பொதிகள் வழங்கும் நன்கொடை நிகழ்வு 30 ஒக்டோபர் 2024 அன்று இலங்கை இராணுவத் தொண்டர் படையணி பல்லூடக மண்டபத்தில் நடத்தப்பட்டது.

இலங்கை இராணுவத் தொண்டர் படையணி வீரர்களுக்கு ஆதரவளிப்பதை நோக்கமாகக் கொண்டு இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது. இலங்கை இராணுவத் தொண்டர் படையணியின் தளபதி மேஜர் ஜெனரல் பீகேஜீஎம்எல் ரொட்ரிகோ ஆர்எஸ்பீ எஸ்சீ ஐஜீ அவர்கள் இலங்கை இராணுவத் தொண்டர் படையணியில் பணியாற்றும் இராணுவ வீரர்களுக்கு இந்த நிவாரணப் பொதிகளை விநியோகித்தார். இந்த நிகழ்வில் இலங்கை இராணுவத் தொண்டர் படையணி சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.