09th May 2023 21:19:28 Hours
மத்தேகொட பொறியியல் இல்லத்தில் 8 அதிகாரிகள் மற்றும் 49 சிப்பாய்களுக்கான 14 நாட்கள் கொண்ட இரசாயன, உயிரியல், கதிரியக்கவியல் மற்றும் அணு அடிப்படை பாடநெறி எண்-3 இன் 08 நிறைவு விழா 27 மார்ச் 2023 இடம் பெற்றது.
இந் நிகழ்வில் இலங்கை இராணுவப் பொறியியல் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ஏஎச்எல்ஜி அமரபால ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசி பீஎஸ்சீ அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு, சான்றிதழ்கள் வழங்கி நிறைவுரையாற்றினார்.
இப் பாடத்திட்டத்தின் நோக்கம், இரசாயன, உயிரியல், கதிரியக்கவியல் மற்றும் அணு போர் முகவர்களுடனான தத்துவார்த்த, தொழில்நுட்ப மற்றும் நடைமுறை அமர்வுகள், கண்டறிதல் உபகரணங்களைக் கையாளுதல், எச்சரிக்கை மற்றும் இயக்கம், தேடல் மற்றும் மீட்பு பயிற்சிகளும் மற்றும் இரசாயன, உயிரியல், கதிரியக்கவியல் மற்றும் அணு அழிப்பு தொடர்பாகவும் பயிற்சியளிக்கப்பட்டன.
நிர்வாகம், பேரழிவு அல்லது தற்செயலான வீழ்ச்சியின் போது இரசாயன, உயிரியல், கதிர்வீச்சு மற்றும் அணுசக்தி முதல் பதிலளிப்பாளர் கடமைகளை கையாள்வதில் அறிவு, திறன்கள் திறனை மேம்படுத்த வடிவமைக்கப்பட்டுள்ளதுடன் மற்றும் அமைதி மற்றும் அமைதிக்கு இடையூறு விளைவிக்கும் வழக்கத்திற்கு மாறான அச்சுறுத்தல்களுக்கு பொறியியல் படையினர் போர் தயார்நிலையில் நாட்டின் அமைதிக்காக மேம்படுத்துவது என்பதாகும்.
இலங்கை அணுசக்தி அதிகாரசபை இலங்கை அணுசக்தி ஒழுங்குமுறை பேரவை, இரசாயன ஆயுத மாநாட்டை அமுல்படுத்துவதற்கான தேசிய அதிகாரசபை மற்றும் சுகாதார அமைச்சு ஆகியவற்றுடன் இணைந்து 14 வது இரசாயன உயிரியல் கதிரியக்க மற்றும் அணுசக்தி பதிலளிப்பு படையினருக்கு இப் பாடநெறியில் பயிற்றுவிக்கப்பட்டது.
இலங்கை பொறியியல் படையணியின் இரண்டாம் லெப்டினன் எம்சி விமேலவர்தன இரசாயன, உயிரியல், கதிரியக்கவியல் மற்றும் அணு அடிப்படை பாடநெறியில் எண் -3 இல் முதலாவது இடத்தை பெற்று பாராட்டையும் பெற்றார்.