09th July 2024 20:20:46 Hours
இயந்திரவியல் காலாட் படையணியின் அதிகாரிகளுக்கு புதிதாக கட்டப்பட்ட அதிகாரிகள் தங்குமிட கட்டிடம் 07 ஜூலை 2024 அன்று படையணி தலைமையக வளாகத்தில் திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் இயந்திரவியல் காலாட் படையணியின் தளபதியும் யாழ் பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதியுமான மேஜர் ஜெனரல் எம்ஜிடபிள்யூடபிள்யூடபிள்யூஎம்சிபி விக்ரமசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
தங்குமிட வளாகம், படையணியின் நீண்டகால தேவையை பூர்த்தி செய்ததுடன் தேவையான அனைத்து வசதிகளுடன் கூடிய 6 அறைகளைக் கொண்டுள்ளது. இயந்திர காலாட் படையணியின் நிலைய தளபதி, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இவ் விழாவில் பங்கேற்றனர்.