14th January 2025 10:57:56 Hours
சமீபத்திய ஆண்டுகளில், நிகழ்நிலை சூதாட்டம் மற்றும் விளையாட்டு அதன் வசதி மற்றும் அணுகுதல் காரணமாக பிரபலமடைந்து வருகிறது. இருப்பினும், இது சமூகத்திற்கு பல ஆபத்துகளையும் தீங்குகளையும் ஏற்படுத்துகின்றது. சமகால சூழலில் இது இராணுவ வீரர்களிடையே பரவலாகப் பரவி வருகிறது. இந்த ஆபத்தை சரியான நேரத்தில் உணர்ந்த இலங்கை இராணுவ தொண்டர் படையணி, இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் பதில் தளபதி மேஜர் ஜெனரல் ஏஎச்எல்ஜி அமரபால ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், நிகழ்நிலை சூதாட்டம் மற்றும் விளையாட்டுகளின் விளைவுகள் குறித்த விரிவுரையை ஏற்பாடு செய்திருந்தது.
2025 ஆம் ஆண்டில் முதல் பயிற்சி நாள் திட்டத்துடன் ஊடகம் மற்றும் உளவியல் செயல்பாட்டு பணிப்பகத்தின் பொதுப் பணிநிலை அதிகாரி 2 மேஜர் எம்.எச்.எம்.எஸ். பண்டார எல்எஸ்சீ அவர்கள் இந்த பொருத்தமான தலைப்பில் விரிவுரையை நிகழ்த்தினார்.
தனது சொற்பொழிவின் போது, நிகழ்நிலை சூதாட்டம் குறிப்பிடத்தக்க பணப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் என்று அவர் வலியுறுத்தினார், ஏனெனில் பாதிக்கப்பட்டவர்கள் தங்களால் இயன்றதை விட அதிகமாக செலவு செய்யலாம், இழப்புகளைத் தொடரலாம் அல்லது பெரிய வெற்றியை எதிர்பார்க்கலாம். இது கடன், செலுத்தப்படாத இரசீதுக்கள் மற்றும் திவால்நிலைக்கு கூட வழிவகுக்கும், இதனால் அன்றாட செலவுகளை நிர்வகிப்பது கடினம். மேலும், கட்டாய சூதாட்டம் உறவுச் சிக்கல்கள், சட்டச் சிக்கல்கள், மோசமான வேலை செயல்திறன், மோசமான உடல்நலம், தற்கொலை மற்றும் தற்கொலை முயற்சிகள் போன்ற ஆழமான மற்றும் நீண்டகால விளைவுகளையும் ஏற்படுத்தக்கூடும் என்பதை அவர் எடுத்துரைத்தார்.
மேலும், நிகழ்நிலை சூதாட்டம் மற்றும் நிகழ்நிலை விளையாட்டிற்கு பலியாகாமல் இருப்பதன் முக்கியத்துவத்தை அவர் எடுத்துரைத்தார்.
பயிற்சி நாள் நிகழ்ச்சி இலங்கை இராணுவ தொண்டர் படையின் பிரதி பதில் தளபதி பிரிகேடியர் பி.எம்.ஆர்.ஜே. பண்டார அவர்களின் மேற்பார்வையில் நடைபெற்றது. 20 அதிகாரிகள் மற்றும் 120 சிப்பாய்கள் விரிவுரையில் பங்கேற்றனர்.