Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

04th June 2025 11:37:17 Hours

அரந்தலாவ படுகொலையின் 38 வது நினைவு தினம்

அரந்தலாவ படுகொலையின் 38 வது நினைவு தினம் 2025 ஜூன் 2 ஆம் திகதி அரந்தலாவ சர்வதேச பௌத்த நிலையத்தில் அனுஸ்டிக்கப்பட்டது. 1987 ஜூன் 2 ஆம் திகதி அம்பாறை மாவட்டத்தில் நடந்த இந்தப் படுகொலையில், 33 பௌத்த பிக்குகளும் நான்கு பொதுமக்களும் தமிழீழ விடுதலைப் புலிகளினால் கொலை செய்யப்பட்டனர்.

இந்த நிகழ்வு வண. கலாநிதி கிரிதிவெல ஸ்ரீ சுமனரத்ன தேரரின் வழிகாட்டுதலின் கீழ், கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் பீஆர் பத்திரவிதான யூஎஸ்ஏடபிள்யூசீ பீஎஸ்சீ, 24 வது காலாட் படைப்பிரிவின் தளபதி, சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் பல பிரமுகர்களின் பங்கேற்புடன் நடைபெற்றது.

பாதிக்கப்பட்டவர்களின் நினைவாக மத அனுஷ்டானங்கள் நடைபெற்றதுடன், பாதிக்கப்பட்டவர்களை நினைவுகூரும் வகையில் நினைவுத் தூபிக்கு அருகில் ஒரு புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது.