Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

26th February 2024 15:44:55 Hours

அடிப்படை நீச்சல் மற்றும் உயிர்காக்கும் பாடநெறி எண். 19 வெற்றிகரமாக நிறைவு

வன்னி பாதுகாப்பு படை தலைமையக தளபதி மற்றும் சிங்க படையணி படைத்தளபதி மேஜர் ஜெனரல் டப்ளியூபீஏடிடப்ளியூ நாணயக்கார ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டியூ அவர்களின் அனுசரனையுடன் 21 பெப்ரவரி 2024 அன்று அனுராதபுரம் ரணசேவபுரத்தில் வன்னி பாதுகாப்பு படை தலைமையக நீச்சல் தடாகத்தில் ‘அடிப்படை நீச்சல் மற்றும் உயிர்காக்கும் பாடநெறி எண். 19’ இன் நிறைவு நிகழ்வுகள் இடம்பெற்றது.

இலங்கை இராணுவத்தின் அனைத்து படையணிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தி 27 ஆண் சிப்பாய்கள் ஆர்வத்துடன் பயிற்சியை பின்பற்றினர். 17 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணி சிப்பாய் வீஏபீ குமார பாடநெறியின் சிறந்த மாணவருக்கான சான்றிதழ் பெற்றுக்கொண்டார்.

விடுகை நிகழ்வில் பல்வேறு கலாசார நடன நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் அதனைத் தொடர்ந்து பாடநெறி பங்கேற்பாளர்களின் உயிர்காக்கும் செயல்விளக்கம் மற்றும் நீச்சல் காட்சி இடம்பெற்றது.