23rd October 2022 16:55:23 Hours
முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 68 வது படைப்பிரிவின் கீழுள்ள 681 வது பிரிகேடின் 9 வது இலங்கை தேசிய பாதுகாப்பு படையணியின் சிப்பாய்களினால் நிர்மாணிக்கப்பட்ட புதுக்குடியிருப்பு சுகந்திபுரம் ஸ்ரீ ராமர் இந்து கோவிலின் பிரதான நுழைவு வாயில் மற்றும் பக்கச் சுவரை ஒக்டோபர் 19 படையினர் சம்பிரதாயமாக நிர்வாகத்திடம் கையளித்தனர்.
பிரதம குருக்கல் அவர்களின் வேண்டுகோளின் பேரில் , 9 வது இலங்கை தேசிய பாதுகாப்பு படையணியின் கட்டளை அதிகாரியின் மேற்பார்வையின் கீழ் இந்த நிர்மாணிப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டதுடன், 9 வது இலங்கை தேசிய பாதுகாப்பு படையணியின் சிப்பாய்களால் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக 68 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ரொஹான் பொன்னம்பெரும அவர்கள் மற்றும் பல அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் சுகந்திபுரம் கிராம மக்கள், கோவில் பக்தர்கள் மற்றும் படையினர் கலந்து கொண்டனர்.