04th October 2024 18:37:33 Hours
உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு 242 வது காலாட் பிரிகேட் தளபதியின் வழிகாட்டுதலின் கீழ் 8 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி கட்டளை அதிகாரியின் மேற்பார்வையில் 8 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி படையினரால் ஸ்ரீ வல்லிபுரம் மெசியா பாலர் பாடசாலையில் 01 ஒக்டோபர் 2024 அன்று ஒரு சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.
நிகழ்ச்சியில் சிறுவர்களுக்கான பொழுதுபோக்கு நிகழ்ச்சியும், 17 சிறுவர்கள் மற்றும் பணியாளர்களுக்கு சுவையான மதிய உணவும் வழங்கப்பட்டது. நிகழ்வின் நிறைவாக, சிறுவர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன. இந் நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.