29th November 2022 22:30:01 Hours
52 வது காலாட் படைபிரிவின் 523 வது பிரிகேடின் 7 வது விஜயபாகு காலாட் படைப்பிரிவின் படையினர் வெள்ளிக்கிழமை (25) சாவகச்சேரி றோமன் கத்தோலிக்க தமிழ்ப் பாடசாலையின் ஏழைக் பிள்ளைகளுக்கு தமது சொந்தப் பணத்தில் உயர்தர மதிய உணவுடன் பாடசாலை உபகரணங்களையும் வழங்கினர்.
றோமன் கத்தோலிக்க தமிழ்ப் பாடசாலையில் கல்வி கற்கும் இருபத்தி மூன்று பிள்ளைகள், படையினரால் வழங்கப்பட்ட அந்த நன்கொடையினையும் மதிய உணவையும் பெற்றுக்கொண்டனர்.
52 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் சஞ்சீவ பெர்னாண்டோ அவர்கள் வழிகாட்டல் மற்றும் ஆசீர்வாதங்களை இத் திட்டத்திற்கு வழங்கினார்.
7 வது விஜயபாகு காலாட் படையணியின் கட்டளை அதிகாரியான லெப்டினன் கேணல் கே.ஜி.எஸ்.என்.ஏ பண்டாரவின் நெருக்கமான கண்காணிப்பில் அவரது படையினருடன் திட்டம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது.