Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

27th January 2025 14:07:49 Hours

7வது கெமுனு ஹேவா படையணி படையினரால் சிரமதான பணி

இராணுவ தளபதியின் வழிகாட்டுதலின் கீழ், கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் பீ.ஆர் பத்திரவிதான யூஎஸ்ஏடபிள்யூசீ பீஎஸ்சீ அவர்களின் மேற்பார்வையில் 7வது கெமுனு ஹேவா படையணி கட்டளை அதிகாரியின் மேற்பார்வையில், "தூய இலங்கை" திட்டத்தின் ஒரு பகுதியாக, 2025 ஜனவரி 25 அன்று நாவல்லடி முதல் ரிதிதென்ன வரையிலான ஏ11 (மட்டக்களப்பு முதல் பொலன்னறுவை வரை) பாதையில் சிரமதான பணி முன்னெடுக்கப்பட்டது.

அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் பொதுமக்கள் இந்த திட்டத்தில் பங்கேற்றனர்.