Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

07th October 2024 16:59:25 Hours

7 வது இலங்கை சிங்கப் படையணி படையினரால் தேவையுடைய குடும்பத்திற்கு வீடு

56 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எஸ். கஸ்தூரிமுதலி ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் 563 வது காலாட் பிரிகேட் தளபதி வை.எம்.எஸ்.சீ.பி ஜயதிலக்க ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்களின் மேற்பார்வையில் 7 வது இலங்கை சிங்க படையணியின் மேஜர் எம்.கே.டி.பீ.பீ.கே. கன்கானிகே ஆர்டபிள்யூபீ அர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்களின் தலைமையில் 7 வது இலங்கை சிங்க படையணியின் படையினர், இலங்கை இராணுவத்தின் 75வது ஆண்டு நிறைவு கொண்டாட்டத்தை முன்னிட்டு, ஓமந்தை நாவற்குள பிரதேசத்தின் தேவையுடைய குடும்பம் ஒன்றிற்கான புதிய வீட்டை 5 ஒக்டோபர் 2024 அன்று நிர்மாணித்து முடித்தனர்.

இத்திட்டம் அப்பகுதியில் உள்ள அனுசரனையாளர்களின் நிதியுதவியில் மேற்கொள்ளப்பட்டது. சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் கிராம மக்கள் வீடு திறப்பு விழாவில் கலந்து கொண்டனர்.