Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

23rd October 2022 17:25:51 Hours

682 வது பிரிகேட் படையினரால் மரதமடு குளக்கட்டில் மணல் மேடுகள் அமைப்பு

மழை காரணமாக புதுக்குடியிருப்பு மரதமடு குளத்தின் நீர் மட்டம் அதிகரித்துள்ளதால் சனிக்கிழமை (22) புதுக்குடியிருப்பு மரதமடு குளக்கரையில் ஏற்பட்ட கசிவுகளை திருத்துவதற்கு 68 வது படைப் பிரிவின் கீழுள்ள 682 வது பிரிகேட் படையினர் உடனடியாக வலிபுர பிரதேச மக்களின் கோரிக்கைக்கு இணங்க தங்களது ஒத்துழைப்பை வழங்கினர்.

6 வது கெமுனு ஹேவா படையணியின் அதிகாரிகள், 3 வது (தொ) விஜயபாகு காலாட் படையணி மற்றும் 9 வது இலங்கை தேசிய பாதுகாப்பு படையணியின் சுமார் 100 இராணுவத்தினர் மணல் மூட்டைகளை அடுக்கி குளக்கட்டு உடைப்பதை தடுத்தனர். 68 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ரொஹான் பொன்னம்பெரும மற்றும் 682 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் சமிந்த கலப்பதி ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ் படையினரால் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டது.