Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

31st December 2021 11:20:29 Hours

66 வது படைப்பிரிவு கிறிஸ்மஸ் பண்டிகைக்கு உதவி

66 வது படைப்பிரிவின் படையினரால் ஆரம்பிக்கப்பட்ட விசேட கிறிஸ்மஸ் கரோல் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை (28) பூநகரி புனித மரியாள் தேவாலய வளாகத்தில் தேவாலய பொறுப்பாளர்களின் ஆலோசணையுடன் முன்னெடுக்கப்பட்டது.

இதன் போது இந்நிகழ்வில் 66 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது, 4 வது இலங்கை இராணுவ மகளிர் படையணி வீராங்கணைகளுடன் இணைந்து புனித மரியாள் தேவாலயம் மற்றும் புனித அன்னாள் தேவாலய கரோல் குழுக்கள் கரோல் பாடல்கள் பாடப்பட்டதுடன் அருட்தந்தை சுலக்ஷன நத்தார் வாழ்த்துச் செய்தியை வழங்க, தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கில மொழிகளில் கரோல் கீதங்கள் பாடப்பட்டன.

அப்பகுதியிலுள்ள இந்து, பௌத்த மற்றும் இஸ்லாமிய மதப் பிரமுகர்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு விழாவிற்கு மேலும் முக்கியத்துவம் மற்றும் வண்ணம் சேர்த்தனர். இப்பகுதியில் வாழும் அனைத்து சமூகத்தினரிடையேயும் இன நல்லிணக்கத்தையும் நல்லெண்ணப் பிணைப்பையும் வளர்க்கும் நோக்கில் திருச்சபையில் உள்ள மதகுருமார்கள் திட்டத்திற்கு தங்களது சிறந்த ஒத்துழைப்பை வழங்கினர்.