17th March 2023 19:50:55 Hours
வன்னிப் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 65 வது காலாட் படைப்பிரிவின் 652 வது காலாட் பிரிகேட் படையினர் புதன்கிழமை (மார்ச் 15) மாங்குளம் நட்டான்கண்டல் பிரதேசத்தில் வசிக்கும் ஒரு வறிய குடும்பத்திற்கு 15,000/= ரூபா பெறுமதியான அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் ஆடைகளை வழங்கினர்.
652 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் சஞ்சீவ வனசேகர மற்றும் படையினர் மேற்படி குடும்பத்தின் வறிய நிலையைக் கேட்டறிந்து அப்பகுதியிலுள்ள கிராம சேவை அதிகாரியுடன் கலந்துரையாடியதன் மூலம் அந்த அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு செய்வதற்காக தமது சொந்தப் பணத்தை வழங்கினர்.
652 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் சஞ்சீவ வனசேகர சில அதிகாரிகளுடன் வீட்டு வாசலுக்குச் சென்று விதவைத் தாயிடம் அந்தப் பொருட்களைக் கையளித்தார்.