22nd July 2021 16:30:42 Hours
திங்கள்கிழமை (19) வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் ஆலங்குளத்தில் அமைந்துள்ள 65 வது படைப்பிரிவு தலைமையகத்தில் மத ஆசீர்வாதம் மற்றும் இராணுவ சம்பிரதாயங்களுக்கு மத்தியில் 13 வது தளபதியாக பிரிகேடியர் அனில் சமரசிறி பொறுப்பேற்றார்.
65 வது படைப்பிரிவின் புதிய தளபதியினை பணிநிலை அதிகாரிகள் அன்புடன் வரவேற்றத்டன் 65 வது படைப்பிரிவு படையினரால் பாதுகாப்பு அறிக்ைகயிடல் மரியாதை வழங்கப்பட்டது.
பின்னர், பிரிகேடியர் அனில் சமரசிறி, கடமை ஏற்றுக்கொண்டதைக் குறிக்கும் வகையில் அதிகாரப்பூர்வ ஆவணத்தில் பௌத்த பிக்குகளின் செத் பிரித் பராயணங்களுக்கு மத்தியில் சிரேஸ்ட அதிகாரிகள் முன்னிலையில் கையொப்பமிட்டார்.
பின்னர், படையினருக்கு அவர் உரையாற்றுவதற்கு முன்பதாக பதவியேற்பின் அடையாளமாக மரக்கன்றினையும் நாட்டி வைத்தார். அனைத்து நிலைகளுக்குமான தேநீர் விருந்துடன் விழா நிறைவடைந்தது.
இந்த நியமனத்தை அவர் ஏற்றுக்கொள்வதற்கு முன்பு, பிரிகேடியர் அனில் சமரசிறி மதுரு ஓயா இராணுவ பயிற்சி பாடசாலையின் தளபதியாக பணியாற்றினார்.
நிகழ்வில் பிரிகேட் தளபதிகள், 65 வது காலாட் படைப்பிரிவின் பணிநிலை அதிகாரிகள், கட்டளை அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.