Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

07th March 2024 15:18:14 Hours

64 வது காலாட் படைப்பிரிவில் "தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதில் இலங்கை இராணுவத்தின் பங்கு" என்ற தலைப்பில் கருத்தரங்கு

64 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எம்.எஸ். தேவப்பிரிய யூஎஸ்பீ என்டிசி அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், 2024 பெப்ரவரி 28 ஆம் திகதி 64 வது காலாட் படைப்பிரிவு தலைமையகத்தில் 'தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதில் இலங்கை இராணுவத்தின் பங்கு' என்ற தொனிப்பொருளில் அறிவு மிக்க கருத்தரங்கு நடாத்தப்பட்டது. இக்கருத்தரங்கு படைப்பிரிவின் சிரேஷ்ட மற்றும் இளம் அதிகாரிகளின் அறிவு மற்றும் விளக்கக்காட்சி திறன்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது.

இக்கருத்தரங்கு தேசிய பாதுகாப்பு தொடர்பான பல்வேறு முக்கியமான தலைப்புகளில் கலந்துரையாடப்பட்டதுடன், வளர்ந்து வரும் இணைய அச்சுறுத்தல்கள், தேசிய பாதுகாப்பில் இலங்கை இராணுவத்தின் பங்கு மற்றும் பல் ஆயுதங்களின் முக்கியத்தை கொண்டிருந்தது.

இந்நிகழ்வில் 64 வது காலாட் படைப்பிரிவின் தளபதி, 641 மற்றும் 642 வது காலாட் பிரிகேட் தளபதிகள், சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.