05th September 2022 18:24:50 Hours
முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 64 வது படைப் பிரிவின் 16 வது தளபதியாக மேஜர் ஜெனரல் நிஷ்ஷங்க ஏரியகம அவர்கள் கடந்த 30 ஓகஸ்ட் அன்று முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் படைப் பிரிவு தலைமையகத்தில் தனது கடமைகளை பொறுப்பேற்றார்.
வருகை தந்த புதிய தளபதிக்கு படைப் பிரிவின் நுழை வாயிலில் 8 வது இலங்கை பீரங்கி படையணியின் படையினரால் பாதுகாப்பு அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டு வரவேற்கப்பட்டார்.
அதைத் தொடர்ந்து, புதிய தளபதி புத்த பிக்குகளின் செத்பிரித் பராயணங்களுக்கு மத்தியில், உத்தியோகபூர்வ ஆவணத்தில் தனது கையொப்பமிட்டு புதிய அலுவலகத்தை ஏற்றுக்கொண்டார்.
அதன் பின்னர், புதிய தளபதியினால் படைத் தலைமையக வளாகத்தில் மரக்கன்றொன்று நட்டப்பட்டது. அத்துடன் படையினருக்கு உரையாற்றுவதற்கு முன்னர் அவர் தனது கடமை தொடர்பான திட்டத்தை வெளிப்படுத்தினார்.
இந் நிகழ்வில் 641, 642 மற்றும் 643 பிரிகேட் தளபதிகள், பதவி நிலை அதிகாரிகள் மற்றும் ஏனைய அணிகளின் படையினர் பலர் கலந்து கலந்துகொண்டனர்.