15th March 2020 16:50:40 Hours
ஜாஎலையிலுள்ள லியோ கழகத்தின் தலைவர்களான திரு சந்தன தரியூ மற்றும் ரவீந்திர தரியூ போன்றோரின் அனுசரனையில் 621 ஆவது படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் வாழ்வாதாரத்தில் பின் தங்கிய குடும்பத்தைச் சேர்ந்த 50 நபர்களுக்கு உலருணவு பொருட்கள் மற்றும் பாடசாலை உபகரணங்கள் நன்கொடையாக வழங்கி வைக்கப்பட்டது.
இந்த நிகழ்வானது இம் மாதம் (14) ஆம் திகதி 14 ஆவது (தொண்டர்) இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் பூரன ஏற்பாட்டில் கஜபாபுர மாயாவெவ சமூக சாலை மண்டபத்தில் இடம்பெற்றது.
இதன் போது வாழ்வாதாரத்தில் பின் தங்கிய குடும்பத்தவருக்கு உலருணவு பொருட்களும் அவரது பிள்ளைகளுக்கு பாடசாலை உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டன.
இந்த நிகழ்வில் 621 ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதி , 14 ஆவது இலேசாயுத காலாட் படையணியின் இரண்டாம் கட்டளை அதிகாரி பங்கேற்றுக் கொண்டனர். Nike sneakers | Nike, adidas, Converse & More