22nd May 2020 12:45:06 Hours
62 படைப்பிரிவு தலைமையகத்திற்கு புதிய பொதுக் கட்டளை அதிகாரியாக நியமிக்கப்பட் பிரிகேடியர் எஸ்எம்எஸ்பிபி சமரக்கோன் அவர்களை படைப்பிரிவின் சிரேஸ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் படையினர்களால் வரவேற்றனர், கல்குளம் பதவி சிரிபுரவில் அமைந்துள்ள 62 ஆவது படைப்பிரிவு தலைமையகத்தில் வைத்து இவர் தனது உத்தியோகபூர்வ கடமையை வியாழக்கிழமை (21) பொறுப்பேற்றுக்கொண்டார்.
மகா சங்கத்தினர்களின் செத் பிரித் ஆனுஷ்டானங்கள் ஆசிர்வாதங்களுக்கு மத்தியில் தனது நியமனத்திற்கான பதவியேற்பு ஆவணத்தில் கையெழுத்திட்டு பதவியை ஏற்றுக்கொண்டார். நிகழ்வில் பிரிகேட் தளபதிகள், அதிகாரிகள் பங்குபற்றிருந்தனர். அதனை தொடர்ந்து சுகாதார அறிவுறுத்தல்களுக்கு அமைவாக தேனீர் விருந்துபசாரம் அதிகாரிகள் உணவகத்தில் ஒழுங்குப்படுத்தப்பட்டிருந்தது.
பின்னர், அதிகாரிகளுக்கு உரையாற்றும் போது தனது நோக்கம் மற்றும் கடமைகளை விளக்கினார். அத்தோடு நாட்டின் சுபீட்சம் மற்றும் இராணுவம் மீதான நல்லெண்ண மேம்பாட்டிக்காக குழுவாக செயற்பட வேண்டியதன் முக்கியத்துவத்தையும் எடுத்துக் காட்டினார். Sneakers Store | Best Nike Air Max Shoes 2021 , Air Max Releases and Deals