13th August 2022 18:17:28 Hours
தெவிநுவர ஸ்ரீ விஷ்ணு உபுல்வான் விகாரையின் பஸ்நாயக்க நிலமேயின் வேண்டுகோளுக்கு இணங்க, 61 வது படைப் பிரிவின் 613 வது பிரிகேட் படையினர் வருடாந்த எசல திருவிழாவை முன்னிட்டு பிரதான நுழைவாயிலை (வாஹல்கட) முழுமையாக வர்ணம் பூசினர்.
3 வது (தொ) கெமுனு ஹேவா கட்டளை அதிகாரியின் மேற்பார்வையின் கீழ், 613 வது பிரிகேட் கட்டளையின் கீழ் உள்ள 3 வது (தொ) கெமுனு ஹேவா படையணியின் படையினர் 2022 ஆகஸ்ட் 5 அன்று விகாரையின் வருடாந்த நிகழ்வைத் தொடங்குவதற்கு முன்னர் வர்ணப்பூச்சு வேலைகளில் கலந்து கொண்டனர்.