29th December 2022 21:15:52 Hours
கேகாலை நகர் பாதணி கடை ஒன்றில் செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 27) ஏற்பட்ட தீயை அணைக்க குருநாகல் 611 வது பிரிகேடின் 8 வது இலங்கை சிங்கப் படையணி படையினர் கேகாலை பொலிஸ் அதிகாரிகளுடன் இணைந்து உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளனர்.
கிடைத்த தகவலுக்கமைய இராணுவ அதிகாரி ஒருவரும் 35 சிப்பாய்களும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றதுடன் சில மணி நேரத்தில் வேகமாக பரவிய தீயை அணைக்கும் நடவடிக்கையினை மேற்கொண்டனர். மேலும் அருகில் உள்ள கட்டிடங்களுக்குள் தீ பரவல் படையினரால் கட்டுபாட்டுக்கு கொண்டுவரப்பட்டது.
மேற்கு பாதுகாப்புப் படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் தீபால் புஸ்ஸல்ல அவர்கள் மற்றும் 61 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் உதயஹேரத் ஆகியோரின் அறிவுறுத்தலின் பேரில் 611 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் சுஜீவ எரகொட மற்றும் 8 வது இலங்கை சிங்க படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் ஏ ஏ ஏக்கநாயக்க ஆகியோரின் கண்காணிப்பில் படையினரால் இந் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.