21st August 2023 22:27:49 Hours
மேஜர் ஜெனரல் ஆர்ஏஜேஎன் ரணசிங்க ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டியூ அவர்கள் புதன் கிழமை (ஓகஸ்ட் 16) காலி, பூஸ்ஸ 61 வது காலாட் படைப் பிரிவு தலைமையகத்தில் மத ஆசீர்வாதங்களுக்கு மத்தியில் 61 வது காலாட் படைப்பிரிவின் புதிய படைப்பிரிவு தளபதியாக கடமைப் பொறுப்பேற்றார்.
புதிதாக நியமிக்கப்பட்ட படைப்பிரிவு தளபதிக்கு 2 வது (தொ) கெமுணு ஹேவா படையினரால் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டு பணி நிலை அதிகாரிகளினால் அன்புடன் வரவேற்கப்பட்டார்.
படைப்பிரிவு தளபதி அவரது அலுவலகத்தில் 'செத்பிரித்' பாராயணங்களுக்கு மத்தியில் அதிகாரப்பூர்வ ஆவணத்தில் கையொப்பமிட்டு புதிய பதவியை ஏற்றுக் கொண்டார்.
புதிய படைப்பிரிவு தளபதி மாங்கன்று நாட்டியதுடன், இராணுவ முறைப்படி அனைத்து அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களுக்கும் உரையாற்றினார். அவர் தனது படைப்பிரிவின் எதிர்கால செயற்பாடுகள் பற்றி தெளிவு படுத்தினார்.
இந்த நிகழ்வின் போது பிரிகேட் தளபதிகள், 61 வது படைப்பிரிவின் அதிகாரிகள், கட்டளை அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.