18th April 2024 15:00:42 Hours
61 வது காலாட் படைப்பிரிவின் படையினர் 61 வது காலாட் படைப்பிரிவின் வெளியேறும் தளபதி மேஜர் ஜெனரல் ஆர்ஏஜே ரணசிங்க ஆர்எஸ்பீ யுஎஸ்பீ என்டிசீ அவர்களுக்கு 10 ஏப்ரல் 2024 அன்று படைப்பிரிவு தலைமையகத்தில் பிரியா விடை விழாவை நடாத்தினர்.
இராணுவ மரபுகளுக்கு இணங்க, அலுவலகத்தில் உத்தியோகபூர்வ ஒப்படைப்பு ஆவணத்தில் கையொப்பமிடுவதற்கு முன்னர் அவருக்கு பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை மற்றும் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.
அன்றைய தினத்திற்கு நினைவுகளைச் சேர்க்கும் வகையில் குழு படம் எடுத்துக் கொண்ட அவர் படையினருக்கு உரையாற்றுகையில் தனது பதவிக்காலத்தில் அனைத்து நிலையினராலும் வெளிப்படுத்தப்பட்ட அர்ப்பணிப்புக்கு பாராட்டு தெரிவித்தார்.
அன்றைய சம்பிரதாயங்கள் அனைத்து நிலையினருக்கான தேனீர் விருந்துடன் நிறைவு பெற்றது.
இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் சிவில் ஊழியர்கள் கலந்துகொண்டனர்.