Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

07th February 2024 11:35:51 Hours

6 வது இலங்கை கவச வாகன படையணியில் படையலகு பயிற்சி

6 வது இலங்கை கவச வாகன படையணியின் 2024 ஜனவரி 26 ம் திகதியன்று 'இலங்கை கவசப் படையணியின் தற்போதைய தேசிய பாதுகாப்பு மற்றும் செயல்பாட்டுத் தயார்நிலை மற்றும் கிளர்ச்சிக்கு எதிரான சூழ்நிலைகளில் கவச வாகனங்களைப் பயன்படுத்துதல்' என்ற கருப்பொருளில் அதன் படையணியில் கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 54 வது காலாட் படைப்பிரிவின் தளபதி கே.எம்.பீ.எஸ்.பி குலதுங்க ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்கள் இந்நிகழ்விற்கு தலைமை தாங்கினார்.

முதல் அமர்வில் ‘இலங்கை கவசப் படையணியின் தற்போதைய தேசிய பாதுகாப்பு மற்றும் செயல்பாட்டுத் தயார்நிலை’ தொடர்பாக ஆராயப்பட்டது, இரண்டாவது அமர்வில் கிளர்ச்சி சூழ்நிலைகளில் கவச வாகனங்களைப் பயன்படுத்துதல்’ என்ற முக்கியமான கருப்பொருள் தொர்பில் ஆராயப்பட்டது.

அன்று மாலை, 6 வது இலங்கை கவச வாகன படையணியின் உணவக நிகழ்வை நடாத்தப்பட்டதுடன், அங்கு பாதுகாப்பு அமைச்சின் ஊடகப் பணிப்பகத்தின் பணிப்பாளரும் பேச்சாளருமான கேணல் எம்பிபிஎன் ஹேரத் ஆர்எஸ்பீ அவர்கள், 'மூன்றாம் வில்லையின் தலைமைத்துவம் என்ற தலைப்பில் மதிப்புமிக்க விரிவுரையை வழங்கினார்.

இந்நிகழ்வில் இலங்கை கவச வாகன படையணியின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.