25th March 2024 18:14:06 Hours
6 வது இலங்கை 6 வது கவச வாகன படையணி படையினர் 10 மார்ச் 2024 அன்று இறந்த போர் வீரர்களின் ஆத்மா சாந்திக்காகவும் சேவையிலுள்ள படையினரின் ஆசீர்வாதங்கள் பொருட்டும் இரவு முழுவதுமான பிரித் பாராயண நிகழ்வு படையலகின் கட்டளை அதிகாரி லெப்டினன்ட் கேணல் பிலிமதலாவே அவர்களின் வழிகாட்டுதலில் நடாத்தப்பட்டது.
நிகழ்வின் போது, மஹா சங்க உறுப்பினர்கள் தர்ம பிரசங்கத்தை நடத்தியதுடன் படையணியின் காயமடைந்த மற்றும் இறந்த போர்வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு ஆசிர்வாதம் வழங்கினர்.
மேலும், 10 மகா சங்கத்தினருக்கான அன்னதானத்தையும் படையினர் மறுநாள் வழங்கினர்.
இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துக்கொண்டனர்.