23rd October 2024 15:27:32 Hours
591 வது காலாட் பிரிகேட் 2024 ஒக்டோபர் 10 அன்று பிரிகேட் தலைமையகத்தில் இரத்த தான நிகழ்வினை ஏற்பாடு செய்தது. இந்நிகழ்வு 59 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் டிஆர்என் ஹெட்டியாராச்சி ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்களின் வழிகாட்டலின் கீழ் 591 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் எம்ஜே உபேசேகர ஆர்எஸ்பீ பீஎஸ்சி அவர்களின் மேற்பார்வையின் கீழ் நடத்தப்பட்டது.
அப்பகுதியில் உள்ள இரத்தத் தேவையை நிவர்த்தி செய்ய 125க்கு மேற்பட்ட அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இரத்த தானம் செய்தனர்.