11th June 2021 16:05:09 Hours
முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீ்ழ் இயங்கும் 59 வது படைப் பிரிவின் கிழ் உள்ள 591 வது பிரிகேட் படைப்பிரிவின் படையினர் செவ்வாய்க்கிழமை (8) ஆம் திகதி ஆலம்பில், விதகரை, கல்லபாடு, செல்வபுரம், வன்னிகுளம், முல்லியாவேலி மற்றும் வாட்டுவாக்கல் ஆகிய இடங்களில் உள்ள ஏழைக் குடும்பங்களுக்கு காய்கறிப் பொதிகளை வழங்கினர்.
இந்த திட்டமானது 59 வது படைப் பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் பி.டி.சூரியபண்டார அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் 591வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் சுஜீவ பெரேரா அவர்களால் மேற் கொள்ளப்பட்டது.
59 வது படைப் பிரிவின் தளபதி, 12 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணி மற்றும் 24வது இலங்கை சிங்க படையணியின் கட்டளை அதிகாரிகள், 591 வது பிரிகேட் சிவில் விவகார அதிகாரி, முல்லைத்தீவு மீன்பிடி சமூக தலைவர், முல்லைத்தீவு பொது சுகாதார பரிசோதகர் மற்றும் பலர் இந் நிகழ்வில் பங்குபற்றினர்.