20th December 2024 11:55:56 Hours
வன்னி பாதுகாப்பு படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ஜே.பீ.சி பீரிஸ் ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ என்டிசி அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் 59 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் டி ஆர் என் ஹெட்டியாரச்சி ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்களின் மேற்பார்வையின் கீழ் அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகராலயம் மற்றும் ஊனமுற்றோர் மையத்துடன் இணைந்து 2024 டிசம்பர் 18 திகதி 12 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணி தலைமையக வளாகத்தில் முல்லைத்தீவு பிரதேசத்தைச் சேர்ந்த பொதுமக்களுக்கான செயற்கை கால்கள் வழங்கும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.
மேலும், 23 மாற்றுத்திறனாளிகளுக்கு அவர்களின் உடல்நிலை உன்னிப்பாக பரிசோதித்து செயற்கை கால்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.