10th April 2024 12:43:34 Hours
வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூ.பீ.ஏ.டி.டபிள்யூ நாணயக்கார ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டிசீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், 59 மற்றும் 64 வது காலாட் படைப்பிரிவுகள் 2024 ஏப்ரல் 07 அன்று முள்ளியவளை டயமன்ட் விளையாட்டு கழக மைதானத்தில் பாரம்பரிய புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்வை ஏற்பாடு செய்தன.
இந் நிகழ்வில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ. பிரமித பண்டார தென்னகோன் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார். நிகழ்வில் பாரம்பரிய கலாசார நிகழ்வுகள் மற்றும் பல்வேறு விளையாட்டுகளான ஆண் மற்றும் பெண்களுக்கான சைக்கிள் பந்தயம், மரத்தன், புத்தாண்டு இளவரசர் மற்றும் இளவரசிகள் தேர்வு, சறுக்கு மரம் ஏறுதல், கயிறு இழுத்தல், தலையணை சண்டைகள் மற்றும் ஏனைய பாரம்பரிய வேடிக்கையான நிகழ்வுகள் இடம்பெற்றன. இதன்போது வெற்றி பெற்றவர்களுக்கு பிரதம விருந்தினர் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் பரிசுகள் மற்றும் வெற்றி கிண்ணங்களை வழங்கினர்.
சரிகம இசைக்குழு மற்றும் ஏனைய கலைஞர்களுடன் கருணாவின் இசை நிகழ்ச்சியுடன் நிகழ்வு மாலை நிறைவடைந்தது. இந்த நிகழ்வானது 64 மற்றும் 59 வது காலாட் படைப்பிரிவுகளின் தளபதிகளின் மேற்பார்வையில் பிரிகேட் தளபதிகள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களின் பங்குபற்றலுடன் இடம்பெற்றது.