20th October 2022 15:43:25 Hours
புத்தளத்திலுள்ள 58 வது படைப் பிரிவு தலைமையகத்தில் சேவையாற்றும் படையினர் தங்கஹாவெல ஸ்ரீ தர்மராஜ விகாரையின் பிரதமகுருவின் வேண்டு கோளுக்கு இணங்க தலைமையக வழியினூடாக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்ட புனித கலச தரிசனம் செய்யும் நிகழ்வில் செவ்வாய்க்கிழமை (18) ஆம் திகதி இணைந்து கொண்டனர்.
இந்த விகாரையின் வருடாந்த நிகழ்வான ‘கடின பிங்கம’ பூஜை நிகழ்வுடன் நினைவுச் சின்னங்கள் காட்சிப்படுத்தலும் இடம் பெற்றது.
58 வது படைப் பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் விபுல இஹலகே, 58 வது படைப் பிரிவின் படையினர் இணைந்து புத்தரின் புனித நினைவுச் சின்னங்களுக்கு மரியாதை செலுத்தினர். அதற்கமைய தலைமையக வளாகத்தைச் சுற்றி வசித்த பொதுமக்கள் ஒன்றுகூடி, படையினருடன் இணைந்து புனித நினைவுச் சின்னங்களுக்கு மரியாதை செலுத்தினர்.