15th October 2023 22:20:25 Hours
58 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எச்.டி.டபிள்யூ.கே.என் எரியகம ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ அவர்கள் ஒக்டோபர் 03 - 04 திகதிகளில் எலகந்தவத்தையில் அமைந்துள்ள 582 வது காலாட் பிரிகேட் மற்றும் அதனுடன் இணைந்த படையலகுகளுக்கு தனது முதல் விஜயத்தை மேற்கொண்டார்.
58 வது காலாட் படைப்பிரிவின் தளபதிக்கு நுழைவாயிலில் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்படுவதற்கு முன்பு 582 வது காலாட் பிரிகேட் தளபதியால் மரியாதையுடன் வரவேற்கப்பட்டார். அன்றைய நிகழ்வின் நினைவுகளை சேர்கும் வகையில் பிரிகேட் பணியாளர்களுடன் குழுப்படம் எடுத்துகொண்ட அவர் வளாகத்தில் மரக்கன்றும் நாட்டினார்.
பின்னர், மேஜர் ஜெனரல் எச்.டி.டபிள்யூ.கே.என் எரியகம ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ அவர்கள் அனைத்து நிலையினருக்கு உரையாற்றுவதற்கு முன்பாக, 582 வது காலாட் பிரிகேட் தளபதி 582 வது காலாட் பிரிகேட் மற்றும் அதனுடன் இணைந்த படையலகுகளால் மேற்கொள்ளபடும் பணிகள் தொடர்பாக விளக்கினார். மேலும், 1 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணி மற்றும் 9 வது கெமுனு ஹேவா படையணி ஆகியவற்றிற்கு அவர் தனது விஜயத்தைத் தொடர்ந்தார்.
அதேவேளை, மேஜர் ஜெனரல் எச்.டி.டபிள்யூ.கே.என் எரியகம ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ அவர்கள் கட்டுகெலியாவ இராணுவ காலாட் படை பயிற்சிப் பாடசாலைக்கு வெள்ளிக்கிழமை (ஒக்டோபர் 06) விஜயம் செய்து பயிற்சி வசதிகளை ஆய்வு செய்தார்.
இதன்போது இராணுவ காலாட் படை பயிற்சிப் பாடசாலையின் தலைமை பயிற்றுவிப்பாளர் அவர்களால் நுழைவாயிலில் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதையை தொடர்ந்து அதிகாரியை வரவேற்றார். பின்னர் படைப்பிரிவின் தளபதி படையினருக்கு உரையாற்றுவதற்கு முன் இராணுவ காலாட் படை பயிற்சிப் பாடசாலையின் தலைமை பயிற்றுவிப்பாளர் பயிற்சி வசதிகள் தொடர்பாக விரிவான விளக்கத்தை வழங்கினார்.
அனைத்து நிலையினருடனான தேநீர் விருந்துடன் அன்றைய நிகழ்வுகள் நிறைவுற்றன. இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பலரும் கலந்துகொண்டனர்.