Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

58 கோல்ப் வீரர்கள் படையணிகளுக்கிடையிலான கோல்ஃப் போட்டியில் பங்குப்பற்றல்

இலங்கை இராணுவ கோல்ஃப் கழகம் ஏற்பாடு செய்த படையணிகளுக்கிடையிலான கோல்ஃப் போட்டி - 2021, 2021 ஏப்ரல் மாதம் 3 ம் 4 ம் திகதிகளில் தியதலாவ இராணுவ கோல்ஃப் மைதானத்தில் நடாத்தப்பட்டது.

படையணிகளை பிரதிநிதித்துவப்படுத்தி மொத்தம் 58 போட்டியாளர்கள் போட்டியில் பங்கேற்றனர்.

படையணிகளுக்கிடையிலான கோல்ஃப் போட்டி – 2021 ஆண்கள் பிரிவில் கெமுனு ஹேவா படை வென்றது. இலங்கை சிங்க படை இரண்டாம் இடத்தை பெற்றுக் கொண்டது.

மகளிர் பிரிவில் இலங்கை மகளிர் படையணி சாம்பியன் ஆனதுடன் இலங்கை பொறியியலாளர் படையணி போட்டிகளில் இரண்டாம் இடத்தைப் பெற்றுக் கொண்டது. மேஜர் ஜெனரல் A.K.G.K.U ஞானரத்ன 40 வயதிற்கு மேற்பட்ட பிரிவில் சாம்பியன் பட்டத்தை வென்றார். பிரிகேடியர் ஜே.எம்.சி ஜயவீர இரண்டாம் இடத்தைப் பெற்றுக் கொண்டார்.

திறந்த பிரிவு (ஆண்கள்) வெற்றியினை கஜபா படையின் கே.ஜி.ஜே.பி ரத்நாயக்க பாதுகாத்தார்.

விருது வழங்கும் விழாவில் இராணுவ பயிற்சி கட்டளைகள் தளபதி மேஜர் ஜெனரல் சேன வடுகே பிரதம அதிதியாக கலந்துக் கொண்டதுடன் சிரேஸ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் கோல்ஃப் ரசிகர்களும் கலந்து கொண்டனர். Running Sneakers Store | First Look: Nike PG 5 PlayStation 5 White Pink Black BQ6472-500 Release Date - SBD