04th March 2020 15:40:30 Hours
பிரிகேடியர் பிரியங்க பெணாண்டோ 58 ஆவது படைப் பிரிவின் 15 ஆவது புதிய படைத் தளபதியாக இம் மாதம் (4) ஆம் திகதி புத்தளத்திலுள்ள படைப் பிரிவு தலைமையகத்தில் தனது பதவியை பொறுப்பேற்றார்.
தலைமையகத்திற்கு வருகை தந்த புதிய படைத் தளபதியை இராணுவ சம்பிரதாய முறைப்படி முதலாவது விஜயபாகு காலாட் படையணியினால் அணிவகுப்பு மரியாதைகள் வழங்கி வைத்து வரவேற்கப்பட்டார்.
பின்னர் புதிய படைத் தளபதி அவர்களினால் தலைமையக வளாகத்தினுள் மாமரநடுகைகள் மேற்கொள்ளப்பட்டன.
பின்னர் அவரது பணிமனைக்கு வருகை தந்து உத்தியோகபூர்வமாக ஆவணங்களில் கையொப்பமிட்டு தனது புதிய பதவியை பொறுப்பேற்றுக் கொண்டார். அதனை தொடர்ந்து படைத் தளபதி அவர்களினால் தலைமையகத்திலுள்ள அதிகாரிகள் மற்றும் படையினர்கள் மத்தியில் உரையை நிகழ்த்தினார்.
இந்த படைப் பிரிவில் 14 ஆவது படைத் தளபதியாக இருந்த மேஜர் ஜெனரல் கே.எச்.பி.பி பெணாண்டோ அவர்களுக்கு பிரியாவிடை நிகழ்வும் ஒழுங்கு செய்யப்பட்டு இராணுவ சம்பிரதாய முறைப்படி அணிவகுப்பு மரியாதைகள் வழங்கி வைத்து கௌரவிக்கப்பட்டார்.
பின்னர் இவர் படையினர் மத்தியில் உரையையும் நிகழ்த்தி வைத்தார். இச்சந்தர்ப்பத்தில் 581, 583 ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதிகள் மற்றும் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் இணைந்திருந்தனர்.latest Nike Sneakers | Patike – Nike Air Jordan, Premium, Retro Klasici, Sneakers , Iicf