12th April 2021 21:13:29 Hours
சமூக நலத்திட்டமாக 571 பிரிகேட் படையினரால் குறைந்த வருமானம் கொண்டவர்களின் வருமானம் ஈட்டுவதற்கும் ஊட்டச்சத்தை மேம்படுத்துவதற்குமான 75,000 மீன் குஞ்சிகளை முல்லைத்தீவு விசுவமடு குளத்திற்கு புதன்கிழமை (7) விடுவித்தனர்.
உணவுகளில் ஊட்டச்சத்துக்கள் குறைவான குடும்பங்களுக்கும், மீன்பிடி குடும்பங்களுக்கு வருமானத்தை ஈட்டுவதற்கும் உதவியாக அமைவதால் கிளிநொச்சி பாதுகாப்புப் படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ஹரேந்திர ரணசிங்க அவர்களின் பூரண ஆசீர்வாதம் கிடைக்கப் பெற்றது.
இந்த திட்டத்தின் ஊடாக விசுவமடு கிழக்கு கிராம சேவையாளர் பிரிவின் இருபத்தைந்துக்கும் மேற்பட்ட மீன்பிடி குடும்பங்கள் பயனடைகின்றன.
57 வது காலாட் படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த ஜயவர்தன மற்றும் 572 வது பிரிகேட் தளபதி கர்ணல் நிஷாந்த முத்துமால ஆகியோரின் வழிகாட்டுதலின் பேரில் படையினர் இந்த திட்டத்தில் தேசிய மீன்வளர்ப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் முல்லைத்தீவு கிளையின் (NAQDA) ஒத்துழைப்புடன் இத்திட்டத்தினை முன்னெடுத்தனர்.
வடக்கு மீன்வளர்ப்பு விரிவாக்கல் அதிகாரி திரு. எஸ். சங்கீதன், பிரதேச மீன்வளர்ப்பு அதிகாரி மற்றும் கிராம மக்கள் மீன் குஞ்சிகள் விடுவிக்கும் நிகழ்வில் கலந்துக் கொண்டனர். latest Nike release | Fullress , スニーカー発売日 抽選情報 ニュースを掲載!ナイキ ジョーダン ダンク シュプリーム SUPREME 等のファッション情報を配信!