Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

23rd February 2020 13:10:08 Hours

57 ஆவது படைப’ பிரிவில் இடம் பெற்ற கலந்துரையாடல்

பாதுகாப்பான வலையமைப்பு மற்றும் சட்ட ஒழுங்கை பேணல் தொடர்பாக கிளிநொச்சி பிரதேசவாசிகளை அறிவுறுத்தும் நோக்கிலான விழிப்புணர்வு கலந்துரையாடலானது 57 ஆவது படைப் பிரிவு கேட்போர் கூடத்தில் (18) ஆம் திகதி செவ்வாயக் கிழமை இப் பிரதேசத்தில் உள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களின் தலைமை பொறுப்பதிகாரிகள் ,விசேட அதிரடிப் படையினர், கிராம சேவகர்கள் பிரதேச செயலக அதிகாரிகள், மதத் தலைவர்கள், பாடசாலை அதிபர்கள் மற்றும் அரச அதிகாரிகள் மற்றும் கிளிநொச்சி வாழ் பிரதேச வாசிகள் பங்களிப்புடன் இடம்பெற்றது.

இந்த கலந்துரையாடல் 57 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதியான மேஜர் ஜெனரல் பீ பி எஸ் டி சில்வா அவர்களின் தலைமையில் இடம் பெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்டவர்களின் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகள் தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டது.

இக் கலந்துரையாடலில் கலந்து கொண்டவர்கள் புதிய அனுபவங்கள் மற்றும் கிளிநொச்சி வாழ் மக்களின் வாழ்வாதா முன்னேற்றங்கள் தொடர்பாகவும், சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் பிரதேசத்தில் சட்ட விரோத செயற்பாடுகளை நிவர்த்தி செய்யும் நோக்கத்துடன் இடம்பெற்றன. இக் கலந்துரையாடலில் அனைத்து படைத் தலைமையகங்களினதும் தளபதிகள் 57 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி போன்றோர் கலந்து கொண்டனர். Nike sneakers | Nike Air Max 270