04th September 2019 12:03:38 Hours
கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 57 ஆவது படைப் பிரிவின் 13 ஆவது புதிய படைத் தளபதியாக மேஜர் ஜெனரல் பீ.பி எஸ் டி சில்வா அவர்கள் இம் மாதம் (2) ஆம் திகதி சமய ஆசிர்வாத அனுஷ்டானங்களின் பின் தனது பதவியை பொறுப்பேற்றார்.
புதிய படைத் தளபதிக்கு 7 ஆவது இலேசாயுத காலாட் படையணியினால் இராணுவ சம்பிரதாய முறைப்படி அணிவகுப்பு மரியாதைகள் வழங்கி கௌரவிக்கப்பட்டு வரவேற்கப்பட்டார்.
பின்னர் தலைமையகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட தேநீர் விருந்துபசாரத்திலும் இணைந்து கொண்டார். இச்சந்தர்ப்பத்தில் இந்த படைப் பிரிவிற்கு கீழ் இயங்கும் அனைத்து கட்டளை தளபதிகள், கட்டளை அதிகாரிகள் மற்றும் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் இணைந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். bridge media | Mens Flynit Trainers