26th January 2020 22:02:59 Hours
வன்னி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ரோஹித்த தர்மசிறி அவர்களின் வழிக்காட்டலின் கீழ் 563 ஆவது படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் ஓமந்தையில் அமைந்துள்ள மரதோடை ஜீ.டி.எம் பாடசாலையில் கல்வி கற்கும் வறிய மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் இம் மாதம் புதன்கிழமை 22 ஆம் திகதி வழங்கி வைக்கப்பட்டன.
தெஹிவலையிலுள்ள நன்கொடையாளியான செல்வி ஜானகி விஜயநாயக அவர்களது நிதி அனுசரனையுடன் 563 ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதி கேர்ணல் பன்டுக பெரேரா அவர்களது தலைமையில் 21 ஆவது சிங்கப் படையணியின் ஒத்துழைப்புடன் பாடசாலை கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
மரத்தோட்டை ஜி.டி.எம் பாடசாலையில் கல்வி கற்கும் வாழ்வாதாரத்தில் பின் தங்கிய குடும்பத்தைச் சேர்ந்த 25 மாணவர்களுக்கு 56 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜாலிய சேனாரத்ன அவர்களது வழிக்காட்டலின் கீழ் வழங்கி வைக்கப்பட்டன.
இந்த நிகழ்வில் 563 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி, 21 ஆவது சிங்கப் படையணியின் கட்டளை அதிகாரி கேர்ணல் ஜானக பெரேரா, இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள், மரதோட்டை பாடசாலையின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இணைந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். Sports News | Nike