25th February 2024 15:20:49 Hours
புளியங்குளத்திலுள்ள ஆயுர்வேத வைத்தியசாலையுடன் இணைந்து 561 வது காலாட் பிரிகேட் மற்றும் 16 வது இலங்கை சிங்கப் படையணி படையினர் புளியங்குளம், குறிசுட்டகுளம் கிராமத்தில் உள்ள பொதுமக்களுக்கான "சித்த ஆயுர்வேத மருத்துவ மருத்துவ முகாமினை" பெப்ரவரி 22 அன்று 16 வது இலங்கை சிங்கப் படையணி முகாம் வளாகத்தில் நடத்தியது.
இச் சிகிச்சையில் மொத்தம் 61 பொதுமக்கள் மருத்துவ சிகிச்சை பெற்றதுடன் அனைத்து பொதுமக்களுக்கும் புத்துணர்வு பொதிகள் வழங்கப்பட்டன.
561 வது காலாட் பிரிகேட் தளபதி கேணல் எம்.ஜி.ஏ மலந்தெனிய ஆர்எஸ்பீ இந்த மருத்துவ முகாமினை ஏற்பாடு செய்வதற்கு தேவையான வழிகாட்டல்களை வழங்கினார்.