Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

11th April 2024 19:14:03 Hours

561 வது காலாட் பிரிகேட்டினரால் ஒரு பன்முக சமூக சேவை திட்டம்

561 வது காலாட் பிரிகேடினரால் 09 ஏப்ரல் 2024 அன்று பன்முக சமூக சேவை திட்டத்தை நடத்தியது. 56 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எஸ்.கஸ்தூரி முதலி ஆர்எஸ்பீ என்டிசி பீஎஸ்சி அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் 561 வது காலாட் பிரிகேட் தளபதி அவர்களின் மேற்பார்வையில் துப்புரவு திட்டம், நீர் பாதைகள் பழுதுபார்ப்பு, மதிய உணவு திட்டம், மற்றும் கனகராயன் குளத்தில் உள்ள பெரியகுளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மாணவ, மாணவியர் 30 பேருக்கு புத்தகம் வழங்கப்பட்டது.

இந்நூல் நன்கொடையானது கிளிநொச்சி மாஸ் க்ரீடா வானவில சமூக பேண்தகைமை வீராங்கனை திருமதி.சாமிரி விஜேரத்ன அவர்களின் பங்குபற்றுதலுடன் உதவி மனிதவளத்துறை முகாமையாளர் திரு.தில்ஷான் வீரசிங்க மற்றும் குழு உறுப்பினர்களான திரு.எம்.முரளிதரன் மற்றும் உதவி எச்ஆர் திரு. டில்ஷன் வீரசிங்க, மற்றும் குழு உறுப்பினர்கள் திரு. எம் முரளிதரன் மற்றும் திருமதி சிவமலர் ஆகியோரினால் புத்தக நன்கொடை அதிகாரிகளால் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் 56 வது காலாட் படைப்பிரிவின் தளபதி பிரிகேடியர் டப்ளியூஎஸ்வீ பெர்னாண்டோ யூஎஸ்பீ என்டிசி ஐஜீ, 561 வது காலாட் பிரிகேட் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.